ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் யானையின் உடல் கண்டெடுப்பு

கோவை ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டு பிடித்ததுள்ளனர். யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை அதிகாரி அசோக்குமார் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த யானை இறந்து ஒரு வாரம் ஆகி இருக்கலாம் என்றும், நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்று உடற்கூறாய்வு மேற்கொண்டு யானை இறப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டறியவுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...