வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் பற்றி எரியும் தீ - ஆன்மிக பக்தர்களுக்கு அறிவுரை

வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால், மலை ஏறும் ஆன்மீக பக்தர்கள் எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.


கோவை: வெள்ளயங்கிரி மலை ஏறும் ஆன்மீக பக்தர்கள் எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கோவை அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இங்கு உள்ள வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலைப் பகுதியில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் உள்ளார். தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது உண்டு.

செல்லும் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும், ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அது போன்று சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி விழா ஆகிய நாட்களில் இந்த மலைக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் செல்வது உண்டு.

தற்போது மலையின் மீது செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் ஏழாவது மலைக்குச் சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகிறார்கள். இவ்வாறு வனப் பகுதி வழியாகச் செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மலை அடிவாரப் பகுதியில் மலை ஏறும் இடத்தில் வனத்துறையினர் பக்தர்களை கடும் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கிறார்கள். இதற்கு இடையே வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் பக்தர்களிடம் எளிதில் தீப்பிடித்து எரியும் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

அதாவது, வனப் பகுதியில் ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளியங்கிரி மலையில் தீப்பிடித்தது உடனடியாக இந்த காட்டு தீ அணைக்கப்பட்டது. வறட்சியால் மரங்களில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து விழுந்து நிறைந்து காணப்படுகிறது.

எனவே மலைமீது செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய தீப்பெட்டி, பீடி, சிகரெட், கற்பூரம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு செல்ல வேண்டாம். அதுபோன்று வனவிலங்குகள் நலன் கருதி பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. வனப்பகுதியை தாங்கள் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். எனவே இதில் அனைவரும் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...