மதுரையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலிமர் செய்தி தொலைக்காட்சி நிருபர் சந்திரன் மர்மநபர்களால் கத்திக்குத்துக்கு உள்ளானார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா வியாபாரிகள் சிலர் தங்களைக் குறித்து செய்தி வெளியிட்டதால் செய்தியாளர் தாக்கப்பட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றனது.
இதனிடையே, பாலிமர் செய்தி தொலைக்காட்சி நிருபர் சந்திரன் கத்திக்குத்து தாக்குதலுக்குட்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கோவை மாவட்ட அனைத்து பத்திரிகைகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.