கோவையில் பூட்டிய வீட்டில் தீவிபத்து - போலீசார் தீவிர விசாரணை

கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி ராமசாமி என்பவரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்த பீரோ, டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தது.


கோவை: கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி, மூன்றாவது வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி வித்யா (வயது57), இவர் 13 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு, உக்கடம் பகுதியில் உள்ள எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

வித்யா வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு காலை பத்து மணியளவில் வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், மாலை சுமார் 4 மணியளவில் வித்யாவின் வீட்டு ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறியுள்ளது.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கோவைப்புதூர் தீயணைப்பு துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மின் இணைப்பை துண்டித்து விட்டு, தீயணைப்பு துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இருப்பினும், வீட்டிலிருந்த டிவி, பிரோ, உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகிநாசமாயின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...