பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலைக்கு எதிர்ப்பு - 2வது நாளாக நீடிக்கும் காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை கும்மி பாடலாக பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தனியார் இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும், நீர்நிலைகள் மாசுபடுவதாகவும், அப்பகுதி மக்களுக்கு அதிக அளவில் சுவாசக் கோளாறு மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், இந்த ஆலைக்கு புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை வழங்கக் கூடாது எனக் கூறி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.



இதன் தொடர்ச்சியாக நேற்றில் இருந்து அனுப்பட்டி கிராமத்தில் ஊருக்கு நடுவே பந்தல் அமைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இரண்டாவது நாளாக இன்று ஆலையால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆதங்கங்களை கும்மி பாடலாக பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆலையை நிரந்தரமாக மூடும்வரை போராட்டம் தொடரும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அனுப்பட்டு மக்களின் இந்தத் தொடர் போராட்டத்திற்கு அருகிலுள்ள பணிக்கம்பட்டி, புளியம்பட்டி பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...