கோவை பெண்கள் சிறையில், மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்!

கோவை பெண்கள் தனிக்கிளைச்சிறையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ‘வரும் முன் காப்போம்’ என்ற எண்ணத்தில், பெண் சிறைவாசிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை பெண்கள் தனிக்கிளைச்சிறையில் பெண் சிறைவாசிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின் படி கோவை பெண்கள் தனிகிளை சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முக சுந்தரம் வழிகாட்டுதலின்படி கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பெண் சிறைவாசிகளுக்கு கற்பப்பை வாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் மருத்துவ சோதனைகள் நடைபெற்றது.

செந்தமிழ் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், ''வரும் முன் காத்தல்" என்ற எண்ணத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கோவை மாவட்ட மகப்பேறு மருத்துவ சங்க மருத்துவர்கள் ராதிகா, சிலம்புசெல்வி மற்றும் சுதா ஆகியோர் மூலம் பெண் சிறைவாசிகளுக்கு கற்பப்பை வாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனை நடைபெற்றது.

இந்த முகாமில் இவ்வகையான புற்றுநோய் வரக்காரணம், அதனை தவிர்க்கும் வழிமுறைகள், எவ்வாறு கண்டறிய வேண்டும் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் பெண் சிறைவாசிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் பெண் சிறை வாசிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...