வால்பாறையில் காருண்யா சோசியல் சென்டர் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்!

கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சுய உதவி குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வால்பாறையில் காருண்யா சோசியல் சென்டர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது வால்பாறையில் சுய உதவி குழுவில் உள்ள பெண்களுக்கு தையல் பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி போன்றவற்றை வழங்கி வருகிறது.

பள்ளி குழந்தைகளுக்கு உதவிகளும், முதியோர் மற்றும் கணவனை இழந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளும் இந்த தொண்டு நிறுவனத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று காருண்யா சோசியல் சென்டர் நிறுவனம் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது இதில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வால்பாறை காவல்துறை ஆய்வாளர் கற்பகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும், வால்பாறையில் உள்ள 62 எஸ்டேட்டுகளிலும் காருண்யா சோசியல் சர்வீஸ் சென்டர் மூலம் சுய உதவி குழுவில் உள்ள பெண்களும் கலந்து கொண்டனர். சுய உதவி குழுக்களை சிறப்பாக நடத்துபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தூய இருதய பள்ளி தாளாளர் சௌமியா பேசியதாவது, பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். தலைசிறந்து விளங்க வேண்டும். பெண்களுக்கு பிரச்சனைகளை கையாளுவது எப்படி என்றும் பெண்கள் இந்த நாட்டின் கண்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் வால்பாறை மையப்பகுதியான காந்தி சிலை போஸ்ட் ஆபீஸ் மற்றும் புதிய பேருந்து நிலைய வரை பேரணி நடைபெற்றது.



இந்த விழாவில் வால்பாறை திமுக நகரச் செயலாளர் சுதாகர், பள்ளி தாளாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...