கோவையில் பெண்களுக்கான இன்னர்வீல் கிளப் அமைப்பு தொடக்கம்-புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

கோவையில் பெண்கள் மட்டும் உறுப்பினர்களாக கொண்ட இன்னர் வீல் கிளப் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய அமைப்பு துவங்கப்பட்டது. இந்த விழாவில் அமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.


கோவை: கோவையில் பெண்கள் மட்டும் உறுப்பினர்களாக கொண்ட இன்னர் வீல் கிளப் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய அமைப்பு துவங்கப்பட்டது.

கோவையில் இன்னர் வீல் மேற்கு பரிந்துரைப்படி இன்னர் வீல் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய அமைப்பு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் ஆஷா சுனில், மாவட்ட இ.எஸ்.ஓ.சிந்து சேது ஆகியோர் கலந்து கொண்டனர்.



26 பெண் உறுப்பினர்களை கொண்டு செயல்பட உள்ள இந்த அமைப்பின் தலைவராக பிரியா ராம்குமார், செயலாளராக அசோக் சங்கீதா ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். பல்வேறு சேவை திட்டங்களை முன்னெடுத்து செயல்பட, இன்னர்வீல் கோயமுத்தூர் சினெர்ஜி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதி எடுத்து கொண்டனர்.



முதல் சேவை திட்டமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலையான களரி, அடிமுறை, கராத்தே ஆகிய பயிற்சிகளை வேர்ல்டு களரி, அடிமுறை ஃபெடரேஷன் மற்றும் அட்வென்சர் மார்ஷியல் ஆர்ட் அகாடமி ஆகியோருடன் இணைந்து இலவசமாக ஒரு வருடம் பயிற்சி அளிக்க உள்ளதாக புதிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.



இந்நிகழ்ச்சியில் இன்னர் வீல் அமைப்பின் மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...