கோவையில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது

கோவையை சேர்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை, தொழில் முனைவோர், மற்றும் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்ற என்.சி.சி மாணவிகள் என 25 பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது, பாஜக சார்பில் வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கி, கோவை மாவட்ட பாஜக மகளிரணி கவுரவித்தது.



கோவை தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக கோவையை சேர்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை, தொழில் முனைவோர், மற்றும் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்ற என்.சி.சி மாணவிகள் என 25 பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருதுகள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன், மாநில மகளிரணி பொதுச்செயலாளர் மோகன பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கோவை தெற்கு மாவட்ட மகளிரணி தலைவி அருணா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் பேசியதாவது:

பெண்கள் என்றாலே சாதனையாளர்கள் தான், ஆண்களை விட வலிமையாளர்கள் பெண்களே, குடும்ப வாழ்க்கையை கையால்வதிலும், பல்வேறு துறைகளிலும் சிறந்த விளங்குகின்றனர். பொதுவாக பெண்கள் துணையில்லாமல் ஆண்களால் குழந்தை வளர்க்க முடியாது, ஆனால் ஒரு பெண் எந்த துணை இல்லாமலேயே குழந்தைகளை வளர்ப்பதோடு தனது வாழ்க்கையை மேம்படுத்துகின்றனர்.

இந்திரா காந்தி பெண் பிரதமர் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தார். இந்தியாவிலேயே சிறந்த கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் என பெண் நிர்வாகிகளே உள்ளனர். தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக தெலுங்கானா ஆளுநராக இருப்பவர் தமிழிசை சவுந்திரராஜன் என்ற பெண் தான்.

மத்தியில் நமது ஆட்சி சிறப்பாக நடக்க பாஜகவில் உள்ள 11 பெண் அமைச்சர்களும் முக்கிய காரணம். அதே போல பாஜகவில் 33 சதவீதம் பெண்களுக்கு பொருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. கம்பீரமாக வலம் வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார்.

தமிழகத்திலேயே கோவை மாவட்ட மகளிர் அணி தான் சிறந்த அணியாக உள்ளது. கொடுத்து பணிகளை விட அதிக பணிகளை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...