தாராபுரத்தில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் - நோய் பரவும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுந்தரம் அக்ரஹாரம் தெருவில் ஹாஜியான திருமண மண்டபம் அருகில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தும், இதே நிலை தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.



திருப்பூர்: தாராபும், சுந்தரம் அக்ரஹாரம் தெருவில் ஹாஜியான திருமண்டபம் உள்ளது. இதன் அருகில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என்று தாராபுரம் நகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.



இதையும் மீறி அப்பகுதி பொதுமக்கள் அதை அலட்சியப்படுத்தும் நோக்கில் அங்கு தினசரி குப்பைகளை கொட்டி வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் பலமுறை அப்பகுதி மக்களிடம் எடுத்துக் கூறியும் அது சிலர் கண்டு கொள்ளாமல் குப்பைகளை ரோட்டிலேயே வீசி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் காய்ச்சல் நோய் தொற்றுப் போன்ற பல இன்னல்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகின்றனர்.



நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வைத்துள்ள கேமராவில் பதிவாகியுள்ள குப்பைகள் கொட்டும் நபர்கள் மீது அபராதம் விதித்து மேற்கொண்டு குப்பையில் கொட்டாமல் இருப்பதற்கு வழிவகை செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...