கோவையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது!

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட ஒண்டிப்புதூர், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலணி மற்றும் நீலிகோணாம்பாளையம், உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலியை சேர்ந்த குரூஸ் சகாயராஜ் எனவரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 3 ஆம் தேதி கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட நெசவாளர் காலணி பகுதியில் நடந்து சென்ற பெண்ணுன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்றுபேர் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நெசவாளர் காலணி பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் மூன்றுபேர் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்தது.

அந்த காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவந்த போலிசார் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக சுற்றிவந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த குரூஸ் சகாயராஜ் என்பதும் சிங்காநல்லூர் பகுதியில் அறை எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.



இந்த நிலையில் சிவகங்கையை சேர்ந்த அவனது நண்பர்கள் இருவர் சமீபத்தில் இவனுடன் சிறிதுநாள் தங்கியிருந்து மூவரும் சேர்ந்து அந்த பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் இவனுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கடந்த வாரம் சிவகங்கை போலிசாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.

அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குரூஸ் சகாயராஜை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...