தாராபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், திருப்பூர் ஈரோடு, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தாராபுரம்: தாராபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாவட்டம் தழுவிய முதலாம் ஆண்டு சதுரங்க போட்டி அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள சதுரங்க கலைக்கூடம் மற்றும் மாவட்டம் தழுவிய முதலாம் ஆண்டு சதுரங்க போட்டி இன்று துவங்கப்பட்டது.
இந்த போட்டியை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இந்த போட்டியை நளினி நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் திருப்பூர் ஈரோடு கோவை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சதுரங்க போட்டியில் பங்கு பெற்றனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.