உடுமலை குட்டைதிடல் பகுதியில் தேங்கியுள்ள கழிவுகள் - உடனடியாக அகற்ற வலுக்கும் கோரிக்கை!

உடுமலை அருகேயுள்ள குட்டைத்திடல் பகுதியில் அனுமதியில்லாமல் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், தேங்கியுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டைத்திடல்,கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்படுவதால், சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடுமலை அடுத்த குட்டைத்திடல் பகுதியில் அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், இங்குள்ள வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தில், மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.



குட்டைத்திடல் பகுதியானது போதிய பாதுகாப்பு இல்லாமல் அமைந்துள்ளதால், குப்பை, கட்டட கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், துர்நாற்றம், கொசு உற்பத்தி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.



மேலும் இந்த குட்டை திடல் பகுதியை சிலர் திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில், உடுமலை நாராயண கவிராயர் மணி மண்டபம், காந்தி சிலை, முதற்கிளை நுாலகம், காவல் நிலையம் அமைந்துள்ள நிலையில், இங்கு வரும் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குட்டைத்திடலில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் மார்ச் 23ஆம் தேதி நோன்பு சாத்தப்பட்டு ஏப்ரல் 13ஆம் தேதி தேர்த்திருவிழா நடைபெறும் நிலையில் குட்டைதிடல் பகுதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...