கோவை அசோகபுரம் பள்ளியில் சிட்டுக்குருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை அருகேயுள்ள அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத் துறை மற்றும் சிட்டுக்குருவிகள் அறக்கட்டளையினர் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.



கோவை: அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ காலனியிலுள்ள அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தினர், சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பள்ளி வளாகத்தில் நடத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத் தலைவர் கேசவசாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை நிறுவனர் தனசேகர் முன்னிலை வகித்து சிட்டுக்குருவிகள் எப்படி வளர்க்க வேண்டும், பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.



இதில் பொறியியல் கல்லூரியிலிருந்து வந்த சிட்டுக்குருவிகள் விழிப்புணர்வு பேருந்து வாகனத்தில் ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவிகள் வரைந்த சிட்டுக்குருவிகள் பற்றியான ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் பறவைகளின் சத்தம் அடங்கிய ஆடியோக்கள் லேப்டாப் மூலம் போடப்பட்டு காண்பிக்கப்பட்டது.



கல்லூரி மாணவ, மாணவிகள் சிட்டுக்குருவி மற்றும் கிளி மாதிரியான வேடமிட்டு பறவைகள் பற்றியான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இதில் பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராக பேருந்தில் ஏறி அங்கிருந்த ஓவியங்களை பார்த்தும், அதுகுறித்தான தகவல்களை கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தனர்.

Newsletter

வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்....

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார்..!

கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றியைப் பெறப் போகிறார்; அந்த பயத்தில் தான் செந்தில் பாலாஜி தரம்...

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், திமுக அமைச்சர் செ...

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...