பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்று கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் இனிப்புகள் வழங்கல்!

பட்ஜெட்டில் கோவை மாவட்டத்திற்கு நவீன செம்மொழி பூங்கா மற்றும் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ஆகிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பீளமேடு அருகே திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.


கோவை: தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை மற்றும் கோவையில் நவீன செம்மொழி பூங்கா, மெட்ரோ ஆகிய அறிவிப்புகளை வரவேற்று மாநகர் மாவட்ட திமுக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

2023-24ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், கோவையில் நவீன செம்மொழி பூங்கா, கோவைக்கு 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மெட்ரோ ரயில் திட்டம் போன்ற எண்ணற்ற புதிய திட்டங்களை இன்று பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்புகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின் படி, கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் நா. கார்த்திக் வழிகாட்டுதலின் படி பீளமேடு ராதாகிருஷ்ணன் மில் சிக்னல் அருகே திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பீளமேடு பகுதி கழக செயலாளர் துரை.செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வட்ட கழக செயலாளர்கள் சபரி தன்ராஜ், ஆ. மாடசாமி, மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், பகுதி கழக நிர்வாகிகள் பூவை துரைசாமி, பந்தல் ரவி, ஜெயராஜ், லக்ஷ்மி

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. தனபால், பகுதி இளைஞரணி அமைப்பாளர் கா. மணிகண்டன், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞரணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...