கோவை செம்மொழிப் பூங்காவில் அமையவுள்ள அம்சங்கள் என்னென்ன?

கோவையில் அமையவுள்ள செம்மொழி பூங்காவில், வரலாற்றுச் சிறப்புகளை அறியும் வண்ணம் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மரவனம் மற்றும் மகரந்த பூங்கா, நறுமணப் பூங்கா, மூலிகை பூங்கா போன்ற 16 வகை பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: தமிழக பட்ஜெட்டில் கோவையில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட நவீன செம்மொழி பூங்காவில் 16 வகையான பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டினையொட்டி காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.



அதன்படி 165 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைய உள்ளதாகவும் முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பிலும் இரண்டாவது கட்டமாக 120 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைக்கப்பட உள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக அமையப்படும் செம்மொழி பூங்காவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இயற்கையை பாதுகாத்தல் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்களுக்கு கல்வி ஆராய்ச்சி சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றிற்கு பயன்பெறும் வகையிலும் பொதுமக்கள் குழந்தைகளுக்கு சிறந்த பொழுது போக்கிற்கும் பயன்பெறும் வகையில் 172.21 கோடி மதிப்பில் உலக தரத்துடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செம்மொழி பூங்காவில் வரலாற்றுச் சிறப்புகளை அறியும் வண்ணம் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மரவனம் ஆகிய வனங்கள் இடம்பெற உள்ளன. பொதுமக்கள் பூங்காக்களின் வகை மற்றும் அதன் தன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் மகரந்த பூங்கா, நறுமணப் பூங்கா, மூலிகை பூங்கா போன்ற 16 வகை பூங்காக்கள் கலை நுட்பத்துடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பூங்கா வளாகத்தில் விசேஷ மண்டபங்கள், உள் அரங்கம், வெளி அரங்கம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், ஓய்வறையில், திறந்தவெளி அரங்கம் மற்றும் உடல் பயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகளுடன் அமைப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகிலேயே இங்கிலாந்தில் உள்ள கியூ பூங்கா மட்டுமே தாவர உயிரியல் வங்கியாகவும் அதன் தொடர்புடைய ஆராய்ச்சி மையமாகவும் உள்ளது. வெப்ப மண்டல நாடான நமது இந்தியாவில் அது போன்ற பூங்கா இதுவரை அமைக்கப்படாத காரணத்தினாலும் இத்தகைய சிறப்புமிக்க செம்மொழிப் பூங்காவை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...