மகளிர் உதவித்தொகையை முதலில் முன்மொழிந்தது மக்கள் நீதி மய்யம் தான்..! - மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி பெருமிதம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்மொழிந்த மெட்ரோ, சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா மற்றும் மகளிருக்கு மாதாந்திர உதவித்தொகை ஆகிய திட்டங்களை தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதை வரவேற்கிறோம் என மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி தெரிவித்துள்ளார்.


கோவை: மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை முதலில் முன்மொழிந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி தான் என அக்கட்சியின் மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் 2023 குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி சிம்ப்ளிசிட்டியிடம் பேசியதாவது,

எங்கள் தலைவர் கமல்ஹாசன் கூறியது போல், மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தை அரசியல் களத்திற்கு கொண்டு வந்தது மக்கள் நீதி மய்யம் தான். பெண்கள் அதிகாரம் மற்றும் மேம்பாடு என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

மேலும் தமிழக அரசு மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெண் குடும்பத் தலைவர்களுக்கு நாங்கள் 3000 ரூபாய் தருவதாக உறுதியளித்திருந்தோம். ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மெட்ரோ திட்டம், டெக் சிட்டி, காந்திபுரத்தில் உள்ள சிறை வளாகத்திற்கு பதிலாக செம்மொழி பூங்கா போன்றவை கோவைக்கு நல்ல வளர்ச்சி அடிப்படையிலான திட்டங்கள்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான சாலைகளால் மக்கள் போராடி வரும் நிலையில், கோவையில் சில பகுதிகளில் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மெட்ரோ திட்டமும் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த பட்ஜெட்டில் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் நல்ல கலவையாக உள்ளது.

அதேநேரம் வருவாய் பற்றாக்குறையை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் சொல்லப்பட்ட காலக்கெடுவிற்குள் தமிழக அரசு பற்றாக்குறையை சரி செய்யும் என நம்புகிறோம். கோயம்புத்தூர் நகரத்தில் உள்ள அனைத்து கல்வித் தரத்துடன் பெரிதும் பயன்பெறும் ஒன்று என்றால் அது டெக் சிட்டி திட்டம் தான். அதுகுறித்த விவரங்களை அறிய காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...