வால்பாறையில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனை கூட்டம்!

வால்பாறையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாணவர்களை கண்காணிக்க வேண்டும், அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குறித்து பேராசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வால்பாறையில் காவல்துறை சார்பில் போதை பொருள் விற்பனை தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆய்வாளர் கற்பகம் மற்றும் துணை ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வால்பாறை அரசு கல்லூரியில் போதை பொருட்கள் ஒழிப்பு, தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் இடையேயான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். தனிமையில் இருக்கும் மாணவர்களின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். படிப்பிலும், விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்த வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் கல்லூரி முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரியில் உள்ள அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...