யுகாதி பண்டிகை - திருப்பூர் கோவில்களில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாலிபாளையம் பகுதியில் உள்ள பழமையான சடையப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து சென்று வழிபாடு செய்தனர்.



திருப்பூர்: யுகாதி பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டம் வாலிபாளையம் சடையப்பன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் சுமந்து சென்று வழிபாடு செய்தனர்.

யுகாதி என்று அழைக்கப்படும் பண்டிகை தெலுங்கு வருடப்பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தெலுங்கு மொழி பேசும் மக்களால், இந்த பண்டிகை கோலாகலாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு யுகாதி பண்டிகையானது மார்ச் 22ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் துவங்கப்படும் காரியங்கள் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்கும் என்பதால் ஏராளமானோர் புதிய தொழில்களை இந்த நாளில் துவங்குவது வழக்கம்.



இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வாலிபாளையம் பகுதியில் உள்ள பழமையான சடையப்பன் கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானமக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இதனிடையே யுகாதி திருவிழாவை முன்னிட்டு வாலிபாளையம் பகுதியில் உள்ள சடையப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்று வழிபாடு செய்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...