யுகாதி பண்டிகை - உடுமலை ரேணுகாதேவி அம்மனுக்கு திருக்கல்யாணம்

யுகாதி பண்டிகையை ஒட்டி உடுமலையில் திருப்பதி கோவிலில் ரேணுகா தேவி அம்மனுக்கு நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சி, வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு வழிபட்ட பக்தர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற உடுமலை திருப்பதி கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக ரேணுகா தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான யுகாதி பண்டிகையையொட்டி இன்று ஸ்ரீ ரேணுகாதேவி அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.



முன்னதாக, சக்தி புண்யகம், யுகாதி பூஜை, அலங்கார பூஜை, கன்னிகா பூஜை, மற்றும் ராஜ தரிசனம், தம்பதியர் பூஜை, சுமங்கலி பூஜை, மகா தீபாரதனை, ஊஞ்சல் உற்சவம் ஆசிர்வாதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது. திருக்கல்யாணம் நிகழ்வில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரேணுகாதேவி அம்மனை வழிபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...