கோவையில் ரவுடிக்கு சரமாரி கத்திக்குத்து - தலைமறைவான மற்றொரு ரவுடிக்கு போலீஸ் வலை

கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் மதுபோதையில் ரவுடி வேலு என்பவரை, சரமாரி கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மற்றொரு பிரபல ரவுடி தக்காளி மாதவன் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதியை சேர்ந்த வேலு எனும் வேலுசாமி என்ற ரவுடி மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதேபோல் மற்றொரு பிரபல ரவுடியான கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தக்காளி மாதவன் என்பவர் மீது சுமார் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறவே ரவுடி வேலு உயிருக்கு பயந்து ஓடியுள்ளான்.



அப்போது வேலாண்டிபாளையம் அடுத்த கொண்டசாமி நாயுடு வீதி பகுதியில் ஓடிய வேலுவை சுற்றி வளைத்த தக்காளி மாதவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடியுள்ளான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சாய்பாபாகாலணி காவல்நிலைய போலீசார், குடல் சரிந்த நிலையில் உயிருக்கு போராடிய வேலுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து தப்பியோடிய பிரபல ரவுடி மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...