மறைந்த கோவை குணாவின் உடலுக்கு கானா பாடல்கள் பாடி இறுதி அஞ்சலி!

மறைந்த பல குரல் கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு அவரது நண்பர்கள் கானா பாடல்களை பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரைப் பற்றி பாடிய கானா பாடல்கள் அங்கிருந்தவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.



கோவை: மறைந்த பலகுரல் கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு அவரது நண்பர்கள் கானா பாடல்கள் பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பலகுரல் கலைஞரான கோவை குணா நேற்று கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், நகைச்சுவை கலைஞர்கள் மற்றும் பல குரல் கலைஞர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து அவரது உடல் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.



அப்போது, அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பலகுரல் கலைஞர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில் கோவை குணாவின் நண்பர்கள் அவரைப் பற்றி கானா பாடல்கள் பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.



அவரைப் பற்றி பாடிய கானா பாடல்கள் அங்குள்ளவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...