கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் 5 பேரின் நீதிமன்ற காவலை மார்ச் 7ம் தேதி வரை நீடித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் உத்திரவிட்டார்.
கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ரூபேஷ், சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 5 மாவோயிஸ்ட்டுகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அரசுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் மாவோயிஸ்ட்டுகள் 5 பேரும் இன்று கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த ஐந்து பேரும் சட்டமன்றம், நாடாளுமன்றங்களை விமர்சனம் செய்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் வழக்கு விசாரணையின் போது, மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருப்பதாகவும், அவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரவேண்டும் எனவும் மாவோயிஸ்டுகளின் வழக்கறிஞரான பாலமுருகன் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து வழக்கை வருகிற மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 4 பேரை மீண்டும் கோவை மத்திய சிறைக்கும், ரூபேஸ் என்ற மாவோயிஸ்ட்டை கேரள சிறைக்கும் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ரூபேஷ், சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 5 மாவோயிஸ்ட்டுகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அரசுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் மாவோயிஸ்ட்டுகள் 5 பேரும் இன்று கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த ஐந்து பேரும் சட்டமன்றம், நாடாளுமன்றங்களை விமர்சனம் செய்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் வழக்கு விசாரணையின் போது, மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருப்பதாகவும், அவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரவேண்டும் எனவும் மாவோயிஸ்டுகளின் வழக்கறிஞரான பாலமுருகன் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து வழக்கை வருகிற மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 4 பேரை மீண்டும் கோவை மத்திய சிறைக்கும், ரூபேஸ் என்ற மாவோயிஸ்ட்டை கேரள சிறைக்கும் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.