கோவையில் கைது செய்யப்பட்ட மாவோய்ஸ்ட்டுகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் 5 பேரின் நீதிமன்ற காவலை மார்ச் 7ம் தேதி வரை நீடித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் உத்திரவிட்டார்.

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ரூபேஷ், சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 5 மாவோயிஸ்ட்டுகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் மாவோயிஸ்ட்டுகள் 5 பேரும் இன்று கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த ஐந்து பேரும் சட்டமன்றம், நாடாளுமன்றங்களை விமர்சனம் செய்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் வழக்கு விசாரணையின் போது, மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருப்பதாகவும், அவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரவேண்டும் எனவும் மாவோயிஸ்டுகளின் வழக்கறிஞரான பாலமுருகன் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வழக்கை வருகிற மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 4 பேரை மீண்டும் கோவை மத்திய சிறைக்கும், ரூபேஸ் என்ற மாவோயிஸ்ட்டை கேரள சிறைக்கும் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...