மார்ச் 24-ம் தேதி அன்று ரமலான் பிறை 1 - கோவை ஹிலால் கமிட்டி அறிவிப்பு

தமிழகத்தில் எங்கும் ரமலான் பிறை தெரியவில்லை. இந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பிறை 1 என அறிவிப்பதாக, கோவை ஹிலால் கமிட்டி தெரிவித்துள்ளது.


கோவை: கோயமுத்தூர் ஹிலால் கமிட்டியின் ரமலான் பிறை பார்க்கும் கூட்டம், உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத்வல் ஜமாஅத் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெற்றது.

பிறை தென்படவில்லை என்று பிறை பார்க்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இந்தியாவின் பல்வேறு தலைநகரங்களிலும் பிறை தென்படவில்லை. எனவே நாளை வெள்ளிக்கிழமையை ரமலான் பிறை 1 என கடைப்பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.



பிறை பார்க்கும் விழா கமிட்டியின் கோவை மாவட்ட தலைவர் ரஹீம் அஜரத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை கமிட்டியின் பிறை பார்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பள்ளி வாசல்களில் நடைபெற்று பிறை சம்பந்தப்பட்ட முடிவுகளை தீர்மானிக்கும் ஒரு கமிட்டியாக செயல்பட்டு வருகிறது.

ரமலான் பண்டிகையின் பிறை பார்க்கும் கூட்டம் நடைபெற்றது. பிறை சம்பந்தமான தகவல்களை தமிழகத்தினுடைய பல பகுதிகளிலும் உறுதி செய்வதற்காக விசாரித்தோம், தொடர்பு கொண்டோம்.

இந்தியாவின் ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் சென்னை போன்ற தலைநகரங்களிலும் தமிழகத்தினுடைய எந்த மாவட்டங்களிலும் பிறை தென்படவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

இறுதியாக தமிழகத்தினுடைய தலைமை காசிர் அறிவிப்பை எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர்களும் இறுதியாக தமிழகத்தில் எங்கும் ரமலான் பிறை தெரியவில்லை என கூறியுள்ளார். எனவே இதன் காரணமாக இந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பிறை 1 என அறிவிக்கப்படுகிறது என கோவை ஹிலால் கமிட்டி சார்பில் அறிவிக்கின்றோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...