கோவை அருகே கேக்கிற்கு பணம் கேட்டதால் டீக்கடையை சூறையாடிய இளைஞர்கள்! - சிசிடிவி வீடியோ

கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் சாப்பிட்ட கேக்கிற்கு கடைக்காரர் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த 5 இளைஞர்கள், டீக்கடையில் இருந்த கண்ணாடி ஜார்களை உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தகாமராஜ் என்பவர் டீக்கடை நடத்திவருகிறார். நேற்று இரவு அவரது கடைக்கு 5 இளைஞர்கள் தேநீர் அருந்த வந்துள்ளனர்.



அப்போது, அவர்கள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேக்குகளை சாப்பிட்டுள்ளனர். பின்னர், தேநீர் மற்றும் கேக் ஆகியவற்றுக்கு பணம் கொடுக்குமாறு காமராஜ், அந்த இளைஞர்களிடம் கேட்டுள்ளார்.



அதற்கு அவர்கள், கேக் கெட்டுவிட்டதாகவும், அதற்கு பணம் கொடுக்க முடியாது எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அங்கு திண்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஜார்களை தூக்கிப்போட்டு உடைத்து சேதப்படுத்தினார்.



மேலும், டீக்கடைக்காரரை அவர்கள் தாக்க முயன்றபோது, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் இளைஞர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டிய காமராஜ், தமது கடையில் இதுபோன்று நடந்துகொள்வது 2வது முறை என்றும் வேதனை தெரிவித்தார்.

மேலும், டீக்கடையைத் தாக்கிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அப்போது அவர் கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...