கோவை அருகே விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டுயானை - மக்கள் அச்சம்

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த தண்ணிர் தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.



கோவை: கோவை ஆனைகட்டிமலைப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தோட்டப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.



இந்த நிலையில் நேற்று இரவு பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டு யானை நுழைந்தது. அந்த யானை கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டுச் சென்றது.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



கோடைகாலம் என்பதால் யானைகள் அடிக்கடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் தேடி வருவது அதிகரித்திருப்பதாகவும், இதனைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...