புதிய பேருந்து நிலையத்தில் துப்புரவுப் பணிகள் - தாராபுரம் நகராட்சித் தலைவர் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் முறையாக ஈடுபடுகிறார்களா? என நகரராட்சித் தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார். 18 வது வார்டில் சாக்கடை கால்வாய், சாலை வசதி, தெரு விளக்கு பராமரிப்பு செய்வது குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.


திருப்பூர்: தாராபுரம் பஸ் நிலையம் பகுதியில் டீ கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து ஏராளமான குப்பைகள் தினம் தோறும் விழுகின்றன.

அத்துடன் புதிய பஸ் நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்கள் பயன்படுத்தும் குளிர்பானங்கள் மற்றும் குப்பைகளை வீசிச் செல்கின்றனர்.



இந்த குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் முறையாக ஈடுபடுகிறார்களா? என நகரராட்சித் தலைவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து தாராபுரம் 18 வது வார்டில் அடிப்படை வசதிகளான சாக்கடை கால்வாய், சாலை வசதி, தெரு விளக்கு பராமரிப்பு செய்வது குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின்போது, திமுக நகர செயலாளர் முருகானந்தம், நகராட்சி பொறியாளர் சண்முக வடிவு, உதவி பொறியாளர் காளீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நகரவை தலைவர் கதிரவன், கவுன்சிலர் செல்லின் பிலோமீனா ஜான்பால், வார்டு செயலாளர் ஜெரால்டு, நகர மாணவரணி துணை அமைப்பாளர் தில்லை முத்து, குடிநீர் மேற்பார்வையாளர் சுப்பிரமணி, துப்புரவு அமைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...