உடுமலை அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் - இழப்பீடு வழங்க கோரிக்கை

உடுமலை அருகே 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதாக கோரியும், இழப்பீடு வழங்க கோரியும் விவசாயிகள் சங்கம் சார்பில் உடுமலை கோட்டாச்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்களுக்கு இழப்பிடு வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாச்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி நகர், பொன்னாளம்மன் சோலை, வளையபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.



இந்நிலையில் இன்று விளைநிலத்திலிருந்த 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அடியோடு சாய்த்து யானைகள் சேதப்படுத்தி உள்ளது.



இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வனப்பகுதியை ஓட்டிய கிராமங்களாக இருப்பதால் வனத்துறையினரிடம் பலமுறை யானைகளை விரட்ட கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.



இதனால் இன்று தோட்டத்தில் புகுந்த யானைகள் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் உடனே போர்க்கால அடிப்படையில் குழு அமைத்து சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், என்றனர்.

இதற்கிடையில் விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாச்சியர் ஜஸ்வந்த்கண்ணனிடம் இழப்பீடு வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...