பல்லடம் அருகே வடமாநில இளைஞரை கடத்திய ஒடிசா பெண் கைது!

பல்லடம் அருகே சின்னக்கரையில் வேலை கேட்பது போல் நடித்து வட மாநில வாலிபரை கடத்தி 40 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வடமாநில பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே வேலை கேட்பது போன்று நடித்து ரூ.40 ஆயிரம் பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பஜுலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் இரவு இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வடமாநில பெண் ஒருவர், வேலை இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், வேலை இருந்தால் தெரிவிக்குமாறும், பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறியதை அடுத்து, அந்த பெண், ஷாஜி மண்டலை சின்னக்கரை பேருந்து நிலையம் அருகே வரச் சொல்லியுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம ஆசாமிகள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர்.

மேலும் 40 ஆயிரம் ரூபாய் பணம், பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.



இது குறித்து ஷாஜி மண்டல் பல்லடம் காவல்துறையில் புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவரது மனைவி சுக்லாவை கைது செய்து, விசாரணை செய்தபோது அந்த பெண்ணும், அவருடன் வந்த நான்கு பேரும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...