கோவையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் - 3 மணி நேரத்தில் பிடித்த காவலர்களுக்கு பாராட்டு

அன்னூர் பகுதியில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்த, அன்னூர் காவல்நிலைய முதல் நிலைக்காவலர் கருணாகரன், காவலர் கண்ணதாசன் மற்றும் குருசாமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


கோவை: அன்னூரில் விபத்தை ஏற்படுத்திய விட்டு சென்ற வாகனத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவலர்களை மாவட்ட எஸ்.பி பாராட்டினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் காவல்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விபத்து ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் சென்றது.

இந்த வாகனத்தை 3 மணி நேரத்தில் அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அன்னூர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் கருணாகரன், காவலர் கண்ணதாசன் மற்றும் குருசாமி ஆகியோர் கண்டுபிடித்தனர்.

இவர்களின் செயலை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் நேரில் வரவழைத்து, பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...