உடுமலை அருகே இறந்த சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிப்பட்ட மக்கள்

உடுமலை அருகே லிங்கம்மாவூரில் சலங்கை மாடு இறந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிபாடு செய்து, ஊருக்கு பொதுவான கோவில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே இறந்த சலங்கை மாட்டுக்கு பூஜை செய்து பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கல் அன்று பிறந்த கன்றுகளை சோமவாரபட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலுக்கு நேர்த்தி கடனாக செலுத்துகின்றனர்.

காளை கன்றுகளை தேர்வு செய்து தெய்வமாக கருதி ஊர் மக்கள் வளர்க்கின்றனர். சலங்கை மாடுகளுக்கு இசைக்கு ஏற்ப ஆடும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் கைகளில் கம்புகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு காலில் சலங்கை கட்டிக்கொண்டு உருமி இசைக்கு ஏற்ப மாடுகளுக்கு முன்னால் சென்று ஆடுகின்றனர். மாடுகளும் இசைக்கேற்ப தலையை ஆட்டி ஆடுகின்றன.

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பாரம்பரிய நடனமாக இது நடைபெற்று வருகிறது. மாட்டுப்பொங்கலன்று சலங்கை மாடுகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கம்.



கொங்கல் நகரம் அருகே உள்ள லிங்கம்மாவூரில் சலங்கை மாடு இறந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். இளைஞர்கள் உருமி இசைக்கேற்ப தேவர் ஆட்டம் ஆடினர். அதனைத் தொடர்ந்து மாடு ஊருக்கு பொதுவான கோவிலில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...