அமரர் ஜி.ஆர்.தாமோதரன் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20ம் தேதியன்று பிஎஸ்ஜி அறக்கட்டளையின் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் பணியாளர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட இந்நிகழ்வில், பிஎஸ்ஜி பணி நிறுவனங்களில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கும், பிஎஸ்ஜி நிறுவனங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற பிஎஸ்ஜி தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கும், கல்லூரி மருத்துவர் பானுமதியின் சகோதரர் நினைவாகவும் பரிசுகள் வழங்கப்பட்டது. இப்பரிசுகளை இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் மருத்துவர் சுதாசெஷாயன் அனைவருக்கும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, பணியாளர் தின விழா கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற சிறந்த அணி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட இந்நிகழ்வில், பிஎஸ்ஜி பணி நிறுவனங்களில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கும், பிஎஸ்ஜி நிறுவனங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற பிஎஸ்ஜி தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கும், கல்லூரி மருத்துவர் பானுமதியின் சகோதரர் நினைவாகவும் பரிசுகள் வழங்கப்பட்டது. இப்பரிசுகளை இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் மருத்துவர் சுதாசெஷாயன் அனைவருக்கும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, பணியாளர் தின விழா கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற சிறந்த அணி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.