வால்பாறையில் ஆதிவாசி கிராமங்களுக்கு தார்ச்சாலை - பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்!

மக்களின் கோரிக்கையை ஏற்று, வால்பாறை நெடுங்குன்றம் செட்டில்மெண்டுக்கு 3 கோடியே 40 லட்சம் செலவில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைப்பதற்கான பணி பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளது.


கோவை: வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளன. இவற்றில் ஓரிரு கிராமங்கள் சாலை அமைக்க ஏற்ற இடமாக உள்ளது.

வால்பாறை அருகே வில்லோனி எஸ்டேட் வனப்பகுதிக்குள் நெடுகுன்றம் செட்டில்மெண்டு உள்ளது. அங்கு சுமார் 60 குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் வால்பாறைக்கு வருவதற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து வர வேண்டும்.



வனப்பகுதியில் ஏற்கனவே மண் சாலை இருந்த நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, நெடுங்குன்றம் செட்டில்மெண்டுக்கு 3 கோடியே 40 லட்சம் செலவில் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது.



இதற்காக நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் எஸ். அழகு சுந்தரவள்ளி மற்றும் 5வது வார்டு உறுப்பினர் M.கவிதா மற்றும் நகரமன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் சத்தியவாணிமுத்து, அன்பரசன், பாஸ்கர், மணிகண்டன் மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வம் மற்றும் நெடுங்குன்றம் முப்பர் ரத்தினசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...