ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு - வர்க்கி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தயாரிக்கப்படும் திண்பண்டங்களில் ஒன்றான ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தின் பாரம்பரியமான உணவுப் பொருட்களான மணப்பாறை முறுக்கு ஆகியவற்றுடன் மானாமதுரை கடம், மயிலாடி கல்சிற்பங்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.


நீலகிரி: தமிழகத்தின் பாரம்பரியமான உணவுப் பொருட்களான ஊட்டி வர்க்கி, மணப்பாறை முறுக்கு ஆகியவற்றுடன் மானாமதுரை கடம், மயிலாடி கல்சிற்பங்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பல கட்ட ஆய்வுக்குப் பின், கடந்த நவ.,30 புவிசார் குறியீடு இதழில், ஊட்டி வர்க்கிக்கு, புவிசார் குறியீடுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கை வெளியானதிலிருந்து, நான்கு மாதங்களுக்குள் அதாவது மார்ச் 30க்குள் இதற்கு ஆட்சபேம் எழுந்தால், அந்த விண்ணப்பம் மறுபரிசீலனைக்கு உள்ளாகும். இல்லாவிடில், அந்தப் பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விடும். அந்த வகையில், வரும் மார்ச் 31 லிருந்து, ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு என்கிற மகத்தான அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.

புவிசார் குறியீடு, ஊட்டி வர்க்கிக்குக் கிடைப்பது, ஊட்டியின் பாரம்பரியத்துக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ஊட்டியைத் தவிர, வேறு எங்கு தயாரிக்கப்படும் வர்க்கியையும் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்வதை, சட்டப்பூர்வமாகத் தடுக்க முடியும்.

இதற்காக பெருமுயற்சி எடுத்த வர்க்கி உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் முகம்மது பரூக் கூறுகையில், ''ஊட்டி வர்க்கிக்குக் கிடைக்கும் இந்த அங்கீகாரம், பெருமகிழ்ச்சியைத் தருகிறது. இதைத் தரமாகத் தயாரிக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வை இந்த அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஏற்கனவே, குறியீடு பெற்றுள்ள ஊட்டி டீயுடன் வர்க்கியும் சேர்வது, இணையற்ற சுவையாக அமையவுள்ளது,'' என்றார்.

மொறுமொறு மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து, அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது. இது, தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பொருளுக்கான பெருமையை உலகறியச் செய்யும்.

இவற்றுடன் மண் பாண்டத்துக்குப் பெயர்பெற்ற மானாமதுரையில் தயாரிக்கப்படும் இசைக்கருவியான கடம், குமரி மாவட்டத்தில் தயாராகும் கைவினைப் பொருளாகிய மயிலாடி கல் சிற்பங்கள் ஆகியவற்றுக்கும் அதே நாளில் புவிசார் குறியீடு என்ற பெருமை கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...