டிவிஎஸ் வீகோ வாகனம் இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனமானது தனது டிவிஎஸ் வீகோ வகை இருசக்கர வாகனத்தை இரண்டு புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்துள்ளது. மெட்டாலிக் ஆரஞ்சு மற்றும் டி-கிரே ஆகிய வண்ணங்களில் அந்த வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய வீகோ வாகனமானது பிஎஸ்4 தரநிர்ணய விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 110 சிசி திறன் கொண்டு, சிவிடிஐ தொழில்நுட்பத்துடன் கூடிய எஞ்சினை கொண்டுள்ளது.

மேலும், இரு வண்ணங்களிலான இருக்கைகள், சில்வரோ பேனல்கள், யுஎஸ்பி சார்ஜர் வசதி ஆகிய வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வீகோ வாகனங்கள் கோவையில் சில குறிப்பிட்ட வாகன விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு துணை அதிபர் அனிருத்தா ஹால்டர் கூறுகையில், டிவிஎஸ் நிறுவனத்தின் தரத்தின் மீதான கவனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது 2016 ஆம் ஆண்டின் ஜேடி பவர் குவாலிட்டி சர்வே ஆப் இந்தியா என்னும் விருதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பெற்றுள்ளது. இதுவே பயனாளிகளிடமிருந்து எங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரம் ஆகும். 

வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இயங்கும் எங்கள் நிறுவனம் இப்புதிய வாகன அறிமுகங்கள் மூலம் வாடிக்கையாளர்களுடன் இணைந்து நாங்கள் இத்தருனத்தை கொண்டாடுகிறோம். 

இப்புதிய வீகோ வாகனத்தில் சின்க் பிரேக்கிங் வசதி, முழுவதுமான டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், இரு வண்ணங்களிலான இருக்கைகள், சில்வர் ஓக் மரத்திலான பேனல் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய வாகனம் இளைஞர்களிடத்திலும், வாடிக்கையாளர்களிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெரும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...