கோவை அருகே மின்கம்பத்தை மோதி உடைத்த காட்டுயானை - மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ராவுத்துக்கொள்ளனூர் பகுதியில் மின் கம்பத்தில் மோதிய ஆண் காட்டுயானை ஒன்று மின்சாரம் பாய்ந்து பலியானது. கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்து ராவுத்துக்கொள்ளனூர் பகுதியில் இன்று அதிகாலை ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.



அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி வனப்பாதுகாவலர் செந்தில் தலைமையிலான பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இறந்து கிடந்த யானையை பரிசோதித்தனர்.



அதில், இன்று காலை சுமார் 7 மணி அளவில் உணவு தேடி வந்த ஆண் காட்டு யானை ஒன்று அவ்வழியாக சென்றபோது மின் கம்பத்தில் மோதி உள்ளது.



அப்போது மின்கம்பம் உடைந்து யானை மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை பரிதாபமாக பலியானது தெரியவந்தது.



இதையடுத்து, கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



மின்சாரம் தாக்கி காட்டு யானை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...