ஆஸ்கர் தம்பதியுடன் கொஞ்சி விளையாடும் தர்மபுரி குட்டியானை - வைரல் வீடியோ!

தர்மபுரியில் கிணற்றில் இருந்து இருந்து மீட்கப்பட்ட நான்கு மாத குட்டியானையை, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் தம்பதியான பொம்மன் - பெள்ளி இருவரும் பராமரித்து வருகின்றனர். குட்டியானையோடு தம்பதி கொஞ்சி விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



நீலகிரி: தர்மபுரியில் யானை கூட்டத்திலிருந்து பிரிந்த குட்டி யானை 40 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின் வனத்துறையினர், அந்த குட்டி யானையை மீட்டனர்.

பின்பு ஒரு வார காலமாக வனத்துறையினர் குட்டியை பாதுகாத்து வந்த நிலையில், தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இந்த முயற்சி பலனளிக்காத நிலையில், குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த 17ஆம் தேதி முதுமலை யானைகள் முகாமிற்க்கு கொண்டு வந்தனர். இந்த குட்டி யானையை "தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்" திரைப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகிய இருவரும் பராமரிக்க அரசு உத்தரவிட்டது.



அதன்படி ஒப்படைக்கப்பட்ட அந்த குட்டி யானை ஆஸ்கார் விருது தம்பதியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வனத்துறை செயலர் சுப்ரியா சாகு டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...