வால்பாறையில் தவக்காலத்தையோட்டி கருமலை மாதாகோவில் வரை கிறிஸ்தவர்கள் நடைபயணம்

வால்பாறையில், ஈஸ்டர் தினத்தையொட்டி நடைபெறும் தவக்கால பிரார்த்தனைக்காக 12 கிலோமீட்டர் தொலைவு வரை கிறிஸ்தவர்கள் நடைபயணம் செய்து கருமலை மாதாகோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் 12 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு, கருமலை மாதாகோவிலில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கிறிஸ்தவர்கள் வரும் 9ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளை ஈஸ்டர் தினமாக கொண்டாடுகின்றனர். இதற்கு முன்னதாக 50 நாட்கள் தவம் இருந்து கொண்டாடுகின்றனர்.



இந்த தவக்கால நாட்களில் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ. ஆலயங்களில். விசேஷமான ஆராதனைகளும் திருப்பலிகளும் நடைபெறும். இதேபோல் வால்பாறையில் உள்ள திரு இருதய ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில் ஒவ்வொரு நாட்களிலும் திருப்பலியும், ஆராதனையும், சிலுவைப்பாதையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.



மேலும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வரும் தவக்கால சிலுவைப்பாதை இந்த ஆண்டு இன்று காலை ஒன்பது மணிக்கு வால்பாறை. திரு இருதய ஆலயத்திலிருந்து புறப்பட்டு 12 கிலோமீட்டர் தூரம் 14 இடங்களில் கிருஸ்துவின் திருப்பாடுகளை நினைத்து பார்த்து சிறப்பு பிராத்தனைகள் நடத்தினர்.



இதனையடுத்து, கருமலை அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சென்று அங்கு ஜெகன் ஆன்டணி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...