தாராபுரத்தில் ரூ.1.07 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட சின்னக்கம்பாளையம், கொட்டமுத்தம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.07கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.



திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1.07 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் கயல்விழி அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னக்கம்பாளையம், கொட்டமுத்தம்பாளையம் கிராமங்களில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, சீலநாயக்கன்பட்டியில் இருந்து தார்ச்சாலை அமைக்க ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிக்குப் பூமி பூஜை நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து குருவப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம், தாராபுரம் வசந்தம் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13.50 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை என மொத்தம் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட வளர்ச்சிப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



இந்த பணிகளை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் துணைத் தலைவர் சசிகுமார் திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...