பொள்ளாச்சி அருகே கணவரை ஆள்வைத்து தாக்கிய சின்னத்திரை துணை நடிகை கைது - பரபரப்பு!

பொள்ளாச்சி அருகே சின்னத்திரையில் நடிக்க கூடாது என கூறிய கணவனை ஆண் நண்பரை வைத்து கத்தியால் தாக்கிய வழக்கில் சின்னத்திரை துணை நடிகை ரம்யா மற்றும் துணை நடிகர் டேனியல் சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே சின்னத்திரையில் நடிக்க கூடாது எனக்கூறிய கணவனை ஆண் நண்பரை வைத்து கத்தியால் குத்திய துணை நடிகை மற்றும் துணை நடிகரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்(42). இவருக்கும், உடையம்பாளையத்தை சேர்ந்த ரம்யா(30) என்பவருக்கும் திருமணமாகி பத்தாண்டுகளான நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ரமேஷ் தனியார் தொழிற் சாலையில் வேலை பார்த்து வருகிறார். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக ரம்யா கோவையில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்ற ரம்யா சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். இவர் அவ்வப்போது கணவனை பார்க்க பொள்ளாச்சி நல்லி கவுண்டம்பாளையம் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு கணவர் ரமேஷுடன் ரம்யா, இருசக்கர வாகனத்தில் முத்தூர் சாலையிலிருந்து நல்லிகவுண்டன் பாளையம் சென்று கொண்டு இருந்த போது திடீரென வழி மறித்த நபர் ரமேஷை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ரமேஷின் மனைவி ரம்யா மீது சந்தேகம் அடைந்து விசாரணை மேற்கொண்டதில், ரம்யாவுடன் நடித்து வரும் சின்னத்திரை துணை நடிகர் டேனியல் சந்திரசேகர் என்பவரை வைத்து கணவரை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த டேனியல் சந்திரசேகர் மற்றும் ரம்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் நடித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது ரம்யாவின் ஆசை. ஆனால் கணவர் ரமேஷ் சின்னதிரையில் நடிக்க வேண்டாம் எனக் கண்டித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரம்யா தனது நண்பர் டேனியல் சந்திரசேகரை வைத்து, கணவரை தாக்க திட்டமிட்டது தெரியவந்தது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...