இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வு!

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக ‘வோல்வோ’ இந்தியா குழும நிர்வாக இயக்குநர் கமல் பாலி, துணைத் தலைவராக கோவை சந்திரா டெக்ஸ்டைல்ஸ், நிர்வாக இயக்குநர் நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ‘சிஐஐ’ அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், தலைவராக ‘வோல்வோ’ குழுமம் இந்தியா நிர்வாக இயக்குநர் கமல் பாலியும், துணைத் தலைவராக கோவை சந்திரா டெக்ஸ்டைல்ஸ், நிர்வாக இயக்குநர் நந்தினியும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிஐஐ தமிழ்நாடு தலைவர், சிஐஐ இந்தியாவின் பெண்கள் பிரிவு தலைவர், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின்(என்ஐடி) ஆளுநர்கள் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்த நந்தினி, தற்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (டிட்கோ) தனி இயக்குநராக உள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...