கோவை 22வது வார்டில் தார் சாலை புதுப்பித்தல் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

கோவை மாநகராட்சியின் 22வது வார்டுக்கு உட்பட்ட குமுதம் நகரில் TURIF - 2022-23 திட்டத்தின் கீழ் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகளில் தார்சாலை புதுப்பித்தல் பணிகளை மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 22வது வார்டில் தார்ச்சாலை புதுப்பித்தல் பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 22 ஆவது வார்டு குமுதம் நகரில் உள்ள பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகளுக்கு TURIF - 2022-23 திட்டத்தின் கீழ், தார் சாலை புதுப்பித்தல் பணிகள் துவக்க விழா நேற்றைய தினம் (25.03.2023) நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவில், கவுண்டம்பாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் அசோக் பாபு, 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு,

6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, 5 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி, 22 வது வார்டு வட்டச் செயலாளர் பிரபாகரன், 8 வது வார்டு வட்டச் செயலாளர் வினோத் குமார், மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், 22 வது வார்டு அவைத் தலைவர் ஆனந்த குமார், துணை ஆணையாளர் முத்துராமலிங்கம், சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜெரால்டு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...