தாராபுரம் அருகே முதல்வர் பிறந்தநாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம் - 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

தாராபுரம் அருகேயுள்ள பொன்னாபுரம் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் காங்கேயம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்குபெற்றது.



திருப்பூர்: தாராபுரம் அருகே முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தாராபுரம் ஒன்றிய திமுக சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.



இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் காங்கேயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கு பெற்றது.



இந்த மாட்டு வண்டி பந்தயம் 200 மீட்டர், 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு முதல் பரிசு ஒரு பவுன் தங்க நாணயமும், இரண்டாவது பரிசாக அரை பவுன் தங்க நாணயமும், மூன்றாவது பரிசாக கால் பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...