கோவை சூலூரில் 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரியை தனிப்படை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோவை: சூலூரில் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ஹரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சூலூர் போலீசார் தனிப்படை அமைத்து பள்ளி மாணவியைத் தேடி வந்தனர்.
அப்போது, கோவை பீளமேடு பேருந்து நிலையத்தில் இருவரும் நிற்பதை கண்ட தனிப்படை போலீசார், உடனடியாக அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவர் அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஹரியை கைது செய்த சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ஹரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சூலூர் போலீசார் தனிப்படை அமைத்து பள்ளி மாணவியைத் தேடி வந்தனர்.
அப்போது, கோவை பீளமேடு பேருந்து நிலையத்தில் இருவரும் நிற்பதை கண்ட தனிப்படை போலீசார், உடனடியாக அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவர் அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஹரியை கைது செய்த சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.