கோவையில் காவலர்கள் குடும்பங்களுக்காக 3 இடங்களில் ஆவின் பாலகங்களை திறப்பு!

கோவை மாநகரில் காவல்துறையினர் குடும்பங்களுக்காக ஆயுதப்படை வளாகம், காந்திபுரம் காவலர் குடியிருப்பு மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட ஆவின் பாலகங்களை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதில், பால், நெய், இனிப்பு வகைகள் என 45 விதமான பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.


கோவை: கோவை மாநகரில் காவல்துறையினர் குடும்பங்களுக்காக ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட 3 இடங்களில் ஆவின் பாலகங்களை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்காக 3 இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கோவை மாநகர ஆயுதப்படை வளாகம், காந்திபுரம் காவலர் குடியிருப்பு மற்றும் உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பு ஆகிய மூன்று இடங்களில் தனித்தனியாக உயர்தர ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டன.



இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார்.



இந்த பாலகங்களில் பால், நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள் உள்ளிட்ட 45 வகையான பால் பொருள்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கோவை மாநகர ஆயுதப்படை துணை காவல் ஆணையர் முரளிதரன், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுகாசினி, ஆயுதப்படைக் காவல் உதவி ஆணையர் சேகர், கோவை ஆவின் நிறுவன பொதுமேலாளர் ராமநாதன் மற்றும் காவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...