கோத்தகிரி அருகேயுள்ள கடைகம்பட்டி, ஜக்கலோடை உள்ளிட்ட பல்வேறு படுகர் இன மக்கள், கால்நடைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி, உப்பு ஹட்டுவ பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
நீலகிரி: கோத்தகிரியில் கால்நடைகள் நோயின்றி வாழ வேண்டி படுகர் இன மக்கள் உப்பு ஹட்டுவ பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடைகம்பட்டி, ஜக்கலோடை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படுகர் கிராம மக்கள் உப்பு ஹட்டுவ பண்டிகையை இன்று சிறப்பாக கொண்டாடினர்.

அதையொட்டி, காலையில் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உப்பு, பச்சை கடலை, புல் ஆகியவற்றை தண்ணீரில் கரைத்தனர்.

பின்னர் அந்த தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து சென்று மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.

இதையடுத்து, அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, செடிகளை, வீட்டுக்கு கொண்டு வந்து முற்றத்தில் கட்டி தொங்கவிட்டனர்.
இதன் மூலம் நோய், நொடிகள் வராமல் இருக்கும் என்பது ஐதீகம். மேலும், உப்பு தண்ணீர் குடிப்பதால் மாடுகள் காலை முதல் மாலை வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்துவிடும் என்பது இந்த மக்களின் நம்பிக்கையாகும்.
பின்னர், வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு படுகர் இன மக்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதுடன், அதன் மூலம் வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடைகம்பட்டி, ஜக்கலோடை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படுகர் கிராம மக்கள் உப்பு ஹட்டுவ பண்டிகையை இன்று சிறப்பாக கொண்டாடினர்.
அதையொட்டி, காலையில் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உப்பு, பச்சை கடலை, புல் ஆகியவற்றை தண்ணீரில் கரைத்தனர்.
பின்னர் அந்த தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து சென்று மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.
இதையடுத்து, அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, செடிகளை, வீட்டுக்கு கொண்டு வந்து முற்றத்தில் கட்டி தொங்கவிட்டனர்.
இதன் மூலம் நோய், நொடிகள் வராமல் இருக்கும் என்பது ஐதீகம். மேலும், உப்பு தண்ணீர் குடிப்பதால் மாடுகள் காலை முதல் மாலை வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்துவிடும் என்பது இந்த மக்களின் நம்பிக்கையாகும்.
பின்னர், வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு படுகர் இன மக்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதுடன், அதன் மூலம் வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.