உடுமலையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கும் கருவூல அலுவலர் - குவியும் பாராட்டு!

உடுமலையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், மாணவர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கி வரும் பொள்ளாச்சி சார் நிலை கருவூல அலுவலர் முத்துக்குமாருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலையில் இலவசமாக போட்டி தேர்வு நூல்கள் வழங்கி மாணவர்களை சார்நிலை கருவூல அலுவலர் உற்சாகப்படுத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் இரண்டில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் பயிற்சி பெற்று அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்து வருகின்றனர்.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பொள்ளாச்சி சார் நிலை கருவூல அலுவலர் முத்துக்குமார், மாணவர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கி வருகிறார். தற்பொழுது ரூ.10,000 மதிப்புள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் வகையிலான நூல்களை வழங்கினார்.

கடந்த முறை நடந்த தேர்வில் 11 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 9 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில், இருவர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...