பல்லடம் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி!

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் பாரம்பரிய உணவுகள், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கான மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில், மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட அருள்புரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டன.



இதில், பாரம்பரியமான சிறு தானிய உணவு வகைகள், திருமணமான புதுமண தம்பதிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள், குழந்தைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என விதவிதமான உணவு முறைகளை போட்டியாளர்கள் காட்சிப்படுத்தினர்.



எள் உருண்டை, சிறுதானிய பாயாசம், கடலை உருண்டை, சத்துமாவு பாயாசம், காய்கறி சூப் போன்ற பல்வேறு விதமான உணவு வகைகளை போட்டியில் காட்சிப்படுத்தப்பட்டன.

போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அடுத்ததாக வட்டார அளவிலான போட்டியிலும், அதில் வெற்றி பெறும் குழுவினர் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கு பெற அழைத்துச் செல்லப்படுவர் என மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...