தாராபுரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்கும் அதிகாரி - ஆடியோ வெளியாகி பரபரப்பு!

அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கித் தருமாறு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வற்புறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. 40 கிலோ நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்கச் சொல்லி தொழிலாளர்களை அதிகாரி வற்புறுத்திய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம், சுமை தூக்கும் தொழிலாளர்களை லஞ்சம் வாங்கித் தர வலியுறுத்தும் அதிகாரி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.



தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தாராபுரம், அலங்கியம், தளவாய்பட்டினம், கொளத்துப்பாளையம், சத்திரம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட சுமார் ஏழு இடங்களில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அலங்கியம் அரசு கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களாக அரசு அதிகாரிகள் மற்றும் சுமைதொக்கும் தொழிலாளர்கள் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், விவசாயிகளிடம் யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு, கடந்த 10 நாட்களாக அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்களிடம், நெல் மணிகளை பிடிக்க வேண்டாம் என அரசு அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் 40 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர மறுத்தால் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் அரசு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் இருவரும் அலங்கியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதிகாரிகள் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு பத்து ரூபாய் கேட்கும் ஆடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



அதிகாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால், கடந்த இரண்டு மூன்று நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல், குவியல் குவியலாக தேங்கி கிடப்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...